யாக்கோபு 1 : 19-21           08 செப்டம்பர் 2025, திங்கள்

“மனுஷ கோபம் தேவநீதியை நடப்பிக்கிறதில்லையே.” – யாக்கோபு 1 : 20

ஒருவர் ஒரு புதிய கார் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். மனைவி மற்றும் அவரின் ஒரே செல்லப் பிள்ளைக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சின் இடையே மகன் வீட்டிற்குள் சென்றான். வேகமாக வந்து காரின் பின்னாடி நின்று ஏதோ செய்து கொண்டிருந்தான். என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை சரியாகக் கவனிக்காமல் காரில் ஏதோ அசுத்தம் செய்கிறான் என்று நினைத்து, கோபத்தில் பையனை அடிக்கிறார். வலி தாங்காமல் மகன் அழுதுகொண்டு அம்மாவிடம் ஓடுகிறான். கோபம் கண்ணை மறைத்தது, சந்தோசம் போனது. சிறிது நேரம் கழித்து காரின் பின்பக்கம் போய் பார்த்தபோது ‘னுயன ஐ டடிஎந லடிர’ என்ற அழகான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கவனிக்காமல் கோபத்தில் மகனை அடித்தது தவறு என்பதை உணர்ந்தார். கோபம் மற்றவரின் அன்பை மறைக்கிறது.

தியானபாகத்தில், மனுஷ கோபம் தேவ நீதியை நடப்பிக்கிறது இல்லை என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். நமது கோபம் கடவுளின் அன்பை விட்டு நம்மை பிரிக்கிறது. கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள தடையாக இருக்கிறது. கோபிக்கிறதுக்குத் தாமதமாய் சகலவித சாந்தத்தோடு கடவுளின் வசனத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நமது கீழ்ப்படியாமையினால் நாம் கடவுளின் கோபாக்கினை பிள்ளைகளாய் இருந்தோம். அன்பு சினமறியாது. கடவுள் தமது அன்பை இயேசுவில் வெளிப்படுத்தினார். ஆண்டவர் இயேசு தமது சிலுவை மரணத்தின் வழியாக நம்மை கடவுளின் கோபத்திலிருந்து விலக்கினார். கடவுளின் அன்பை இயேசுவில் பெற்ற நாம் கோபப்படுகிறதுக்கு தாமதிக்கிறவர்களாக பெற்றுக்கொண்ட அன்பை பகிர்ந்துகொண்டு வாழ தூயாவியானவர் துணை செய்வார்.

அன்பின் கடவுளே, நாங்கள் கோபப்படுகிறதுக்கு தாமதித்து, சாந்தத்தோடு உம்முடைய வார்த்தையைக் கேட்டு வாழ உதவிச் செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.