சங்கீதம் 32 : 1-5 17 ஜூலை 2026, வெள்ளி
“நான் அடக்கிவைத்தமட்டும் ஓயாத கதறுதலினால் என் எலும்புகள் உலர்ந்து போயின.” – சங்கீதம் 32 : 3
ஒரு மனிதன் அவன் உள்ளத்தில் மறைத்துவைத்த பலவிதமான காரியங்களினாலே ஏற்படும் நிலை மனச்சோர்வு (Depression) மற்றும் பலவிதமான நோய்களுக்கு காரணம், அவன் மனதில் அடக்கிவைத்த பலவிதமான காரியங்கள் பாவங்கள்தான்.
இந்த தியானப் பகுதியானது, பாவம் கொண்டுவருகிற மனவேதனையும் தண்டனையும் பற்றி சொல்லுகிறது. தாவீது தன் பாவத்தை ஒத்துகொள்ளாமல் மறைத்து வைத்ததினால் வரும் துன்பத்தையும் மனவேதனையும் தண்டனையும் அடைவதாக நினைத்தான். தாவீது வாழ்க்கையில் மனசமாதானம், மகிழ்ச்சி மற்றும் கடவுளுடைய தயவையும் இழந்தான். அதற்கு பதிலாக அவனுக்கு குற்ற உணர்வு மற்றும் உள்ளத்தில் வேதனையையும் கடவுள் தண்டனையாக கொடுத்தார், அனுபவித்தான்.
ஒரு மனிதன் வாழும்போது நேர்மையாகவும் உண்மையாகவும் தான் செய்த தவறுகளையும் உணர்ந்து பாவத்தை அறிக்கை செய்து வாழ வேண்டும். மனந்திரும்பிய இருதயமானது கடவுளிடத்தில் பாவத்தை அறிக்கையிட்டு, கடவுளின் கிருபையுடன் மன்னிப்பையும் பெற்று, குற்ற உணர்வு இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வு வாழமுடியும்.
நாம் செய்கின்ற தவறுகளையும் பாவத்தையும் கடவுளின் வார்த்தைகள் நம் உள்ளத்தில் இருந்து உணர்த்துகின்றது. நாம் பாவத்தை உணர்ந்தவர்களாக வாழும்போது இயேசு கிறிஸ்துவின் வழியாக மன்னிப்பு பெற்ற விசுவாசிகளாக மாறுகிறோம். பாவ மன்னிப்பு பெற்றுக் கொண்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து நித்திய வாழ்வு கொடுக்கிறவராக இருக்கிறார்.
சர்வ வல்லவரே! எங்களை பாவத்தில் இருந்து மீட்டு புது வாழ்வு தந்த இறைவா, நாங்கள் உமக்குப் பிரியமாக வாழ உதவி செய்தருளும், ஆமேன்.
