22 ஜனவரி, 2021 வெள்ளி
“ஒரு தீர்க்கதரிசி சமாதானத்தைப் பற்றித் துர்தரிசனம் சொல்வானானால்,……நடந்தால்தான் தெரியவரும்….”- எரேமியா 28 : 9
எரேமியா நூலின் இந்தப் பகுதி எப்போதும் என்னை சிரிக்க வைக்கிறது. கர்த்தருடைய தீர்க்கதரிசி என்ற முறையில், எரேமியா மக்களுக்கு அவர்களின் துன்மார்க்கத்தைப் பற்றி எச்சரிக்கிறார். மேலும் அவர்கள் மனந்திரும்பாவிட்டால் தங்கள் நாட்டில் விஷயங்கள் மோசமடையப் போகிறது என்று அவர்களிடம் கூறினார். பாபிலோன் ராஜா ஏற்கனவே ஏராளமான மக்களையும், பொருட்களையும், ஆலயத்தின் அலங்காரங்களையும் கொண்டு போய்விட்டார். இன்னும் என்னென்ன செய்யப்போகிறாரோ என்று மக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் எரேமியா தீர்க்கதரிசி நம்பிக்கையூட்டுகிறார். ‘இல்லை, கடவுள் அந்த மக்களையும் பொருட்களையும் விரைவில் மீட்பார். அமைதி திரும்பும்’ என்கிறார். நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: பெரும்பாலான உண்மையான தீர்க்கதரிசிகள் போர், பஞ்சம் மற்றும் நோய் போன்ற பயங்கரமான விஷயங்களை முன்னறிவித்தனர். ஆகவே, எரேமியா போன்ற ஒரு தீர்க்கதரிசி சமாதானத்தை முன்னறிவிக்கும் போது அது சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது. நிகழ்வின் முடிவை நாம் அறிவோம்.
மனித வரலாற்றைப் பார்க்கும்போது, வஞ்சகர்கள் மட்டுமே சுலபமான வாழ்க்கையைப் பற்றி வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அதை விட கடினமானது. மன்னிப்பு, மகிழ்ச்சி, நித்திய ஜீவன் என கடவுள் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதை விடச் சிறந்தது எது? கடவுளின் பிள்ளைகளாக வாழுவதில் சில துன்பங்கள் வரத்தான் செய்யும். மனிதகுல மீட்பிற்கான பாதை கல்வாரிப் பாதையாகத்தானே இருந்தது. அவர் நம்முடைய துன்பங்களை அவர்மீது எடுத்துக்கொண்டு, நம்மை விடுவித்தார். அவர் எங்களின் பதிலாளாக மரணம் அடைந்தார். அவர் வெற்றியையும் நித்திய ஜீவனையும், அவர் நேசிக்கும் மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். எனவே ஆம், வாழ்க்கை கடினமானது, நாம் அனைவரும் அறிந்ததே, எளிதான பதில்கள் இல்லை. ஆனால் நமக்காக எல்லா கஷ்டங்களையும் தீமைகளையும் வென்றவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் வார்த்தைகளில் நம்பிக்கைவையுங்கள்.
கர்த்தாவே, எனக்கு சிரமம் இருக்கும்போது, பொய்யர்கள் மீது அல்ல, உம்மை நம்புவதற்கு எனக்கு உதவுங்கள். இயேசுவின் வழியே ஆமேன்.
