25 ஜனவரி, 2021          திங்கள்

 “நற்கிரியைகளுக்கென்று … இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டவர்களும், கடவுளின் கைவேலையுமாயிருக்கிறோம்.” – எபேசியர் 2 : 10

கல்லூரியில் படிப்பவர்களுக்கு இது ஒரு கடினமான ஆண்டாகும். வழக்கத்தை விட கடின உழைப்பு தேவைப்படுகிறது. நேரடி வகுப்புகள் இல்லாத நிலையில் கலந்துகொள்ள வேண்டிய விரிவுரைகள் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்களும் கட்டுரைகளும் அதிகமாகின்றன. குறிப்பு எடுத்துக்கொள்வதும், மீண்டும் அவற்றை வாசித்துப் புரிந்து கொள்வதிலும் சிரமங்கள் இருக்கிறது. ஆனால் இச்சிரமங்கள் அனைத்தும் உங்கள் பட்டத்தைக் கையில் பெறும்போது காணாமல் போய்விடும். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் நான் படித்துப் பட்டம் பெற்றேன் என்ற மனநிறைவும் மகிழ்ச்சியும் மாணவர்களையும், அவர்களது பெற்றோரயும் நிறைத்துவிடும். பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் இந்த உலகை எதிர்பார்ப்புகளுடனும், தைரியத்துடனும் எதிர்நோக்குகிறார்; நம்பிக்கையுடன் முன் நடக்கிறார்.  உலகைச் சந்திப்பதற்கான தனது திறமையில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

நம்முடைய எதிர்கால வாழ்விற்கென கர்த்தர் முன்னெடுக்கும் திட்டங்கள் என்ன? எரேமியாவின் புத்தகத்தில் கர்த்தர், ‘உங்கள் விஷயமாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். அவைகள் கேட்டை அல்ல, வாழ்வையே குறித்தவை. வருங்கால நன்னம்பிக்கையை உங்களுக்குக் கொடுப்பதே என் நோக்கம்’ என்று குறிப்பிடுகிறார். பல சூழல்களின் வழியாக அதாவது ஏற்றதாழ்வுள்ள, நன்மையும் தீமையுமுள்ள வாழ்க்கையின்வழியாக நம்மை முன்நடத்துகிறார். அனுபவங்களின் வழியே பட்டம் பெறச்செய்கிறார். பல சூழ்நிலைகளின் வழியே வாழ்வை  நமக்குக் கற்பிக்கிறார். வாழ்க்கை மற்றும் அதன் மாற்றங்கள் வழியே கடவுள் நம்மை வடிவமைக்கிறார். நாம் தவறுகிற நேரத்திலும் அன்புடன், பொறுமையுடனும், மிகுந்த திறமையுடனும், அவர் தனது தொடுதலை நம் வாழ்வில் பயன்படுத்துகிறார். புதிய வேலையைத் தொடங்குவது, திருமணம் செய்துகொள்வது, இராணுவத்திற்குச் செல்வது அல்லது வாழ்க்கையின் பல தொடக்க புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடப்போகிறீர்களா? அவருக்கென்று செய்யுங்கள். அவர் சித்தம் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் காட்டும் திசையைக் கேட்க இது நல்ல நேரம்.

பரலோகத் தகப்பனே, வாழ்க்கையின் பல மாற்றங்களைச் சந்திக்கும்போது எங்களுடன் இரும். எங்களுக்காக தன்னைக் கொடுத்த உங்கள் குமாரனை நாங்கள் சார்ந்திருக்க உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.