அப்போஸ்தலர் 3 : 6-10 29 ஜுன், 2017 வியாழன்
“நசரேயன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் குணமாகி….” – அப்போஸ்தலர் 4 : 10
சிற்றூர்களில் சகஜமாக நடைபெறுகிற காட்சியை ஒரு இடத்தில் கண்டேன். ‘அப்பா பேரைச் சொல்லி, பக்கத்துக் கடையிலே போய் அஞ்சு ரூபாக்கி வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா.’ இளைய மகன் டயர் வண்டியை ஓட்டிக் கொண்டு ஓடினான். கடைக்காரரிடம் கேட்டான். `உன் அப்பா ஆரு’ என்று கேட்டார். பையன் பெயரைச் சொன்னான். கடைக்காரர் பொருளைக் கொடுத்தார்.
நசரேயன் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நடைபெற்ற நிகழ்வை ஆதாரப் பகுதியில் வாசிக்கிறோம். நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியை வாசிப்புப் பகுதியில் படிக்கிறோம்.
நீங்கள் சிலுவையில் அறைந்தவரும், கடவுள் மரித்தோரிலிருந்து எழுப்பினவருமாகிய நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் குணமாகி உங்கள் முன் நிற்கிறான், என்று நடைபெற்ற அற்புதத்திற்கு விளக்கம் கொடுத்தார் பேதுரு.
நமது நம்பிக்கை சிலுவையில் அறையப்பட்ட இயேசு என்று மட்டும் நினைக்க வேண்டாம். இயேசு உயிர்த்தெழுந்த ஆண்டவர்.
உயிர்த்தெழுந்த ஆண்டவர் என்பதில் புது உயிர் கொடுக்கும் வல்லமை பெற்றவர் என்பது விளங்குகிறது (சங்கீதம் 23:3). `கிறிஸ்து இயேசு’ என்ற பெயரில் பாவமன்னிப்பு, மீட்பு, விடுதலை, இரட்சிப்பு, உயிர்ப்பு என்ற புதிய வாழ்வின் ஆதாரங்கள் அடங்கியிருக்கின்றன.
இயேசுவின் பெயரை பேதுரு உச்சரித்தார். பிறப்பிலிருந்தே இரு கால்களும் பயனற்றிருந்தவரின் கையைப் பிடித்தார், தூக்கினார், எழுந்து நட என்றார் பேதுரு. உட்கார்ந்திருந்தவரின் பாதங்களும் கணுக்களும் பலம் கொண்டன. எழுந்தார், நடந்தார், குதித்தார். கடவுளை துதித்தார்.
இயேசுவின் பெயரை நோய் நீக்க, பிரச்சனை நீங்கிட, சண்டைகள் ஓய்ந்திட நமது குடும்பத்திற்குள் பயன்படுத்தியிருக்கிறோமா?
`கூசல துநளரள’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இயேசுவின் பெயரைப் பயன்படுத்திப் பார்; பலனைக் காண்பாய்.
அருளுருவே! அருளரசே! உமது திருமகன் வழியாக எம்மை ரட்சித்தீர் தோத்திரம். இயேசுவின் வல்லமையுள்ள பெயரை நம்பிக்கையுடன் பயன்படுத்திடும் பயன்பாட்டு ஆவியைத் தாரும். ஆமேன்.
