ஏசாயா 44 : 6-8 14 ஜுன் 2022, செவ்வாய்
“நீங்கள் திகைக்கவும் பயப்படவும் வேண்டாம்,” – ஏசாயா 44 : 8
நீங்கள் வீட்டில் தனிமையாயிருக்கும் போது கதவு தானாக திறந்தால் என்ன செய்வீர்கள். பயந்து போவோமல்லவா? அதே சமயம் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ வந்து நான்தான் பயப்பட வேண்டாம் என்று கூறினால் சற்று அமைதி அடைவோம் அல்லவா?
கடவுளும் இதே போல் தான் பயப்படாதே என்கிறார். என்னைப் போன்ற வேறு தெய்வம் உண்டோ என்றும் என்னைப் போன்ற கன்மலை எங்கும் உண்டோ என்கிறார் இவரே நம்முடைய ஒரே கடவுளாக இருக்கிறபடியால் வேறு எதற்கும் நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை.
விநோதமான சப்தங்கள் நம்மை பயமுறுத்தினாலும் ஒரே கடவுள் நம்மோடு இருக்கிறபடியால் நாம் எதற்கும் பயப்படோம்.
ஆனால் நாம் எதிர்காலத்தை பாழாக்கி கொண்டிருக்கிறோம். மனுக்குல வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் தெய்வங்களை மனிதன் பயமுறுத்தும் சக்திகளாகவே எண்ணி வந்தான் என்று அறியலாம். அவ்வாறு பயப்படவில்லையெனில் அந்த தெய்வங்கள் குடும்பத்தை அழித்துவிடும் என்றும் நோய்களை தரும் என்று பண்ணைகளை இல்லாமலாக்கும் என்றும் நம்பினர்.
நாம் இப்படிபட்ட எண்ணத்தை விட்டு வெகுதூரம் வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தெய்வங்களை வழிபடாமல் இருக்கலாம். ஆனால் பணம், புகழ், அதிகாரம் போன்றவற்றின் வழியாக அத்தெய்வங்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பழைய பயமுறுத்தும் தெய்வங்களைப்போன்றே இருக்கின்றன. இவைகள் தங்கள் வல்லமையை பயன்படுத்தி நம்மை பாடுபடுத்தி, பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவைகள் பாதுகாப்பான கடவுள்கள் அல்ல ஆபத்தான சக்திகள்.
கடவுள் முதலும் இறுதியுமானவர் அவரையல்லாமல் வேறு கடவுள்கள் இல்லை என்று நம்புகிற நாம் இத்தகைய வல்லமைகளுக்கு ஏன் பயப்பட வேண்டும். ஆனால் இவைகளுக்கு தான் பெரிய வல்லமை என்று எண்ணக்கூடாது. நம்முடைய கடவுளே கன்மலையானவர் வல்லமை மிகுந்தவர், சர்வ வல்லவர்.
நமது ஆண்டவர் பாதுகாப்பானவர். நம்மை கைவிடாத அடைக்கலமுமானவர். அவர் பாறையை போன்று உறுதியாக நின்று நமக்கு எதிராக வருபவைகளை தூள் தூளாக்குவார். நாம் அவருடையவர்கள், எனவே நாம் சங்கீதம் 46-ஐ பாடலாக பாடுகிறோம். “கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே” என்று. இவ்வுலகம் பயமுறுத்தினாலும் நாம் கலங்கோம் மலைகள் விலகினாலும் நாம் பயப்படோம்.
பிதாவே! நாங்கள் உம்மில் உறுதியான நம்பிக்கைக் கொள்ள உதவும். நீர் ஒருவரே எங்களுக்குப் பாதுகாப்பை முழுமையாக அருள வல்லவர் என்பதை உணர உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.