சங்கீதம் 27 : 11-14                                18 செப்டம்பர் 2025, வியாழன்

“கடைசியாக, ஆண்டவரிலும் அவர் சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.” – எபேசியர் 6 : 10

“க்ஷடிடிளவ ளை வாந ளநஉசநவ டிக அல நநேசபல” என்ற விளம்பரம்போல் பல விளம்பரங்கள் சரீரத்தை பெலப்படுத்த இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு சத்து பானங்கள் அருந்த வேண்டும். ஏனெனில், சரீரம் பலத்தோடு இருந்தால்தான் உழைக்கமுடியும்.

தியானபாகத்தில் பவுல் ஆன்மீக வாழ்விலும் பலப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவ வாழ்வு இலேசானதொன்றுமல்ல. அது போராட்டங்கள் நிறைந்தது. கிறிஸ்துவ வாழ்வு ஒர் ஆன்மீக ஓட்டம். பலமின்றி ஓடுவது கடினம். எனவே பவுல், கடவுளின் வல்லமையிலும் சத்துவத்திலும் பலப்படும்படி அழைப்புக் கொடுக்கிறார்.

கடவுள் கிறிஸ்துவில் நம்மை அவருடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டுள்ளார். பரிசுத்தமாய் வாழவேண்டும் என்று விரும்புகிறார். தன்னில்தானே நாம் பரிசுத்தமாய் வாழ இயலாது. நாம் பலவீனமானவர்கள், சோர்ந்துபோகக்கூடியவர்கள். ஏனென்றால் இவ்வுலகம் பாவம் நிறைந்தது. பிசாசு நம்மை கடவுளிடம் இருந்து பிரித்துவிட செயல்படுகிறான். தேவையற்ற கவலையில் நம்மை மனமடியச் செய்கிறான்.

இச்சூழலில், நாம் கடவுளின் பிள்ளைகளாய் வாழ கடவுளின் வல்லமையும் சத்துவமும் அவசியமாக இருக்கிறது. கடவுளின் வார்த்தையினாலும் சாக்கிரமெந்தாலும் பலத்தைத் தருகிறார். நாம் கடவுளுக்கு காத்திருப்பது அவசியம். கடவுளின் வார்த்தையை கவனமாகக் கேட்டு, அவ்வசனத்தை என் வாழ்வுக்குரியதாக விசுவாசித்து, என் வாழ்வோடு இணைத்துக்கொள்ளும்போது ஆன்மீக வாழ்வில் பலப்படுகிறோம். சாக்கிரமெந்தில் ஆண்டவர் இயேசுவின் மெய்யான சரீரமும், இரத்தமும் நம்மை பலப்படுத்துகிறது.

‘கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள் புதுப் பெலன் பெற்று, கழுகுகளைப் போல் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்’ என்று ஏசாயா குறிப்பிடுகிறார். கர்த்தருக்குக் காத்திருப்போம். புதுப் பெலன் பெற்று தைரியத்துடன் ஓடுவோம். கடவுள் நம்முடன் இருக்கிறார்.

எங்கள் பெலனாகிய கடவுளே, தொடர்ந்து உமது வார்த்தையினால் சத்துவத்தையும் பெலத்தையும் நாங்கள் பெற்றுவாழ கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.