பிலிப்பியர் 2 : 28-30           12 ஏப்ரல் 2021, திங்கள் 

“என்னுடைய இந்தச் சந்தோஷம் சம்பூரணமாயிற்று. அவர் பெருக வேண்டும்;நானோ சிறுகவேண்டும்.” – யோவான் 3 : 29

தியானவரி, முழுக்கு முனிவர் என்று பெயர் பெற்ற யோவான் கூறியது.  யோவான் இயேசுவையே அவர் என்று குறிப்பிடுகிறார்.  இயேசு யோவானை விட இளமையானவர்.  யோவானுடைய பிரசங்கத்திற்கும் ‘சுத்திகரிப்பின்’ ஞானஸ்நானத்திற்கும் பெரிய கூட்டம் கூடிற்று.  இயேசு யோவானால் திருமுழுக்குப் பெற்றவர்.  இந்த நிலையில், இயnசு திருமுழுக்குக் கொடுக்கத் துவங்கினார்.  இதை அறிந்தவர்கள் யோவானிடம், நேற்று வந்தவன் திருமுழுக்குக் கொடுக்கிறான் …என்று பொறாமையில் பேசினர். தொழில் போட்டி நமது காலத்தில் சகஜம்.  இப்போட்டியில் ஒருவரை ஒருவர் அழிக்கவும் தயங்குவதில்லை.  சபைப் பணியிலும் தொழில் போட்டி இருக்கிறது.  ஒரு சபையில் இருப்பவரை, இன்னொரு சுவிசேஷகர், பிரசங்கியார் ஆவிக்குரிய தங்கள் சபைக்குக் கடத்தி விடுகின்றனர்.  இது ஒரு வகை ஆன்மீகத் திருட்டு எனலாம்.  ஒரு ஊரில் ஐந்து சபைகள் இருக்கின்றன.  ‘ஆதிகாலத்துச்’ சபை என்ற பாரம்பரியச் சபைகள் இரண்டு இதில் அடங்கும்.  மீதி மூன்று சபைகளும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள் உருவானவை.  இவற்றின் உறுப்பினர் எல்லாருமே பாரம்பரியச் சபைகளிலிருந்து வந்தவர்கள்.  இந்த மூன்று சபைக்கும் கல்லறை சொந்தமாக இல்லை.  ஆகவே பிற சபைக்குக் குடிபெயர்ந்தவர்கள், செத்த பின்பு கல்லறையில் வைக்கப்படுவதற்காக, ஆதிச் சபையின் ‘காணிக்கை உறுப்பினராகவும்’ (ழுசயஎந லுயசன ஊhசளைவயைn) இருக்கின்றனர்.

யோவான் காலத்தில், இந்தச் சபை பாகுபாடு தோன்றியது எனலாம்.  ஆனால் யோவான், இயேசு ஞான ஸ்நானம் கொடுத்ததில் ‘என் சந்தோஷம் நிறைவாயிற்று’ என்றார்.  ஏனெனில் யோவானின் கூட்டத்தார் எவருக்கும் இயேசு திருமுழுக்கு செய்ததாகத் தெரியவில்லை. இயேசு வெளிப்படையாகத் திருப்பணி செய்ததில் யோவான் நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்.  ‘நான் சிறுக வேண்டும், அவர் பெருக வேண்டும்!’ என்றார்.  நமது ஊழியத்தில், ஆண்டவரின் பெயர் விளங்கட்டும்.  நமது செயல்களால் இறையவர் போற்றப்படட்டும்.  நான், நாம் சிறுமையடையலாம்! ஆண்டவர் பெருமைப்படட்டும்.  இதற்கு ஆண்டவர் தாமே நமது மனங்களைப் பக்குவப்படுத்தட்டும்.

உலகை நேசிக்கிற கடவுளே! உலகத்தை இரட்சிக்க உமது குமாரனை அனுப்பினீர்.  எமது ஊழியங்களால் இயேசு பெருமைப்படட்டும்.  ஆமேன்.