லூக்கா 1 : 11-20                                       09 டிசம்பர் 2022, வெள்ளி

“நீ பேச முடியாமல் மௌமாயிருப்பாய், என்றான்.” – லூக்கா 1 : 20

இந்தக் கதையில், இந்தப் பகுதியை நான் வாசிக்கும் போதெல்லாம், என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடவுள் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதற்கு தெளிவான ஆதாரம் தேவை என்று சகரியா கேட்கிறார். தேவ தூதனுக்கு இது எதிர்பாராத ஒரு நிலை. கண்களை அங்குமிங்கும் உருட்டியிருக்க வேண்டும், தன்னைச் சுட்டிக்காட்டி, `ஹலோ, நீ இங்கே யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் தெரியுமா, கடவுளிடமிருந்தே அனுப்பப்பட்டவன் நான்,’ இதைவிட உனக்கு என்ன ஆதாரம் வேண்டும்? என்று மனதுக்குள் கேட்டிருக்கலாம். அதன் விளைவாக தூதன் கொடுத்த அடையாளம் தான் `அடுத்த ஒன்பது மாதங்களுக்கு உன்னால் பேச இயலாது, ஊமையாகவே இருப்பாய்’ என்பது.

கிறிஸ்து பிறப்பின் வரலாறு, மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்தது. ஏனெனில் நமது கடவுள் அற்புதமான ஆச்சரியங்களின் கடவுள். இரக்கம் நிறைந்தவரும் கூட. நாம் பாவத்தில் விழுந்து, அவர் பேரில் நம்பிக்கையிழந்த போது, அவர் நம்மை ஆயுதம் கொண்டு தாக்கி அழித்துவிடவில்லை. நாம் அவரிடம் திரும்பும்படி நம்மை தம்மண்டை அழைத்தார். தேவையெனில், நம்மை சிட்சித்து திருத்துவார். ஆனால் இவையனைத்தும் நமது நன்மைக்கென்றும், நிறைவான ஆசீர்வாதங்களை நாம் பெறுவதற்காகவுமே. உண்மையாகவே ஒன்பது மாதங்கள் வாய் பேச முடியாதபடி ஊமையாய் வாழ்வதென்பது, சகரியாவுக்கு மிகுந்த கடினமான வேதனை தரும் காலமாகவே இருந்திருக்கும். ஆனால் அதன் முடிவு, எல்லையில்லா சந்தோஷம் அல்லவா!

நாமும்கூட பாவத்தில் விழுந்து, சந்தேகப்படுகிறவர்களாக இருக்கிறோம். பாவ இருளிலிருந்து விடுபட்டு நம்மையும் அவர் தம்மண்டை அழைக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம். இதற்காகவே இயேசு நம்மை நாடி வந்தார். நம்மைத் தேடி கண்டு பிடிக்கவும், திரும்பவும் நம்மைத் தம்மண்டை அழைத்துக் கொள்ளளவும், பொறுமையுடன் அன்புடன், களிப்புடன் நம்மை பிதாவோடு நல்லுறவில் சேர்க்க இயேசு இவ்வுலகில் மானிடனாய் பிறந்து வந்தார். `அப்பொழுது நமது வாய் நகைப்பினாலும் நமது நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது. கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே அப்போது சொல்லிக் கொண்டார்கள். கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார், நாம் சந்தோஷமடைந்தோம். அவர் பிறப்பின் வழியாக அடைக்கப்பட்டிருக்கிற நம் வாழ்வையும் அவர் திறக்க வல்லவர் அந்த நம்பிக்கையோடு வாழ்வோம்.

ஆண்டவரே, என் வாழ்க்கையில் நீர் செய்த பெரிய காரியங்கள் அனைத்திற்கும் நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.