சங்கீதம் 14 15 டிசம்பர் 2025, திங்கள்
“சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக.”– சங்கீதம் 14 : 7
நமது இன்றைய தியானப்பகுதி மனிதகுலத்தின் நிலையைப் பற்றிய பிரதிபலிப்பை தெரிவிக்கிறது. கடவுளை நிராகரிப்பவர்களின் முட்டாள் தனத்தையும் பாவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், நம்பிக்கை மற்றும் இரட்சிப்புக்கான ஏக்கத்தின் குறிப்பில் சங்கீதக்காரர் முடிக்கிறார். கடவுள் மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் நாளையும் கடவுளின் விடுதலை மற்றும் மறுசீரமைப்புக்கான ஆழ்ந்த ஏக்கத்தை சங்கீதக்காரர் வெளிப்படுத்துகிறார்.
இந்த வசனம் நாட்டின் விடுதலைக்கான ஏக்கக்குரல் அத்துடன், மேசியாவின் வருகைக்கான தீர்க்கதரிசனமும் ‘சீயோனிலிருந்து’ இரட்சிப்புக்கான ஏக்கமும் வெளிப்படுகிறது. இவை இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் மீட்பைக் கொண்டுவர வந்த இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. கிறிஸ்துவின் வழியாக, கடவுளின் மறுசீரமைப்பு வாக்குறுதி நிறைவேறும், மேலும் அவர் வழங்கும் இரட்சிப்பில் மகிழ்ச்சியடைய யாவரும் அழைக்கப்படுகிறார்கள்.
நாம் எவ்வளவு உடைந்து போனாலும் அல்லது இழந்துபோனாலும், கடவுள் எப்போதும் தனது இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதில் திட்டமாய் இருக்கிறார். மறுசீரமைப்பின் வாக்குறுதி ஒரு தொலைதூர நம்பிக்கை மட்டுமல்ல – அது இயேசுவுடனான உறவின் வழியாக நாம் அனுபவிக்கக்கூடிய ஒன்றாகும்.
விசுவாசிகளாகிய நாம் மகிழ்ச்சியடையலாம், ஏனென்றால் கடவுளுடைய இரட்சிப்பு வந்துவிட்டது என்பதை நாம் அறிவோம். தனித்தனியாகவும் கூட்டாகவும் நம்மை மீட்டெடுக்கவும் நம்மை புதுப்பிக்கவும் அவர் தொடர்ந்து செயல்படுகிறார் என்ற உறுதியுடன் நாம் வாழ வேண்டும். வாக்குமாறாத அவருடைய வாக்குறுதிகளை, நாம் அந்த நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்வை தொடருவோம்.
கடவுளே! இயேசு கிறிஸ்துவில் நீர் அருளிய இரட்சிப்புக்கு நன்றி. உமது இரட்சிப்பில் நிலைநின்று மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
