2 கொரிந்தியர் 11 : 7-9 09 ஜூன் 2026, செவ்வாய்
“…எனக்குக் குறைச்சல் நேரிட்டபோதும், நான் ஒருவருக்கும் பாரமாயிருக்கவில்லை;” – 2 கொரிந்தியர் 11 : 9
வாழ்க்கையில் சவால்கள் எப்போதும் வரும். சில நேரங்களில் நம் தேவைகள் மிகுந்தபோதிலும், பிறர் உதவியின்றி நம் முயற்சியையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும். எறும்பு தனது உடலைவிட 20 மடங்கு பெரிய எடையுடைய தானியங்களை எடுக்கும் மற்றும் கூட்டு முயற்சியோடு ஒருமித்து வாழும். பெரிய எடைகளை சுமந்தாலும் அது சுமையை விட்டுவிடாது, தொடர்ந்து முன்னேறுகிறது. நமது வாழ்க்கையிலும், பிறரின் உதவி இல்லாத நேரங்களில் நம்மால் செய்யக்கூடியதை நம்பிக்கையுடன் செய்யும் முயற்சியே நம்மை முன்னேற்றும்.
இன்றைய தியானப்பகுதில் மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்தார்கள். எல்லாவற்றிலும் உங்களுக்குப் பாரமாக இருக்காதபடி என்னைக் காத்துக்கொண்டேன், இனியும் அப்படியே இருப்பேன்.” இந்த வசனத்தில் பவுல் தனியாக அல்ல, “சகோதரர்கள் தேவையைப் பூர்த்தி செய்தார்கள்” என்று சொல்கிறார். இது சபையின் உதாரத்துவத்தையும் வெளிப்படுகிறது. தேவையான நேரங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவுவது கிறிஸ்தவ வாழ்க்கையின் அழகு. இது ஒற்றுமையையும் அன்பையும் கட்டியெழுப்புகிறது. அவர் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது, தனது தேவைகளுக்காக பிறர்மீது சுமையாக இருக்க விரும்பவில்லை. அவருடைய சேவை சுயநலமில்லாதது, அது முழுவதும் அர்ப்பணிப்பும் அன்பும் கொண்டது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும்போதுகூட, மற்றவர்களுக்கு சுமையாக இருக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், பவுல் தனது வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தைக் காத்துக்கொண்டார் – பிறருக்கு சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உறுதி. இது நமக்கும் ஒரு பாடம். நாம் உதவி பெறலாம், ஆனால் அதையே நம்பி சோம்பேறியாக இருக்கக்கூடாது.
பவுல் அப்போஸ்தலன் உதவி இல்லாத நேரங்களில் தன்னால் தேவையை நிறைவேற்றியதைப் பார்க்கும்போது, நாம் கடின உழைப்பையும் பொறுமையையும் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மால் செய்யக்கூடியதை செய்வதே நம்பிக்கையின் உண்மையான சோதனை. சிறிய முயற்சிகளும் தொடர்ந்து செய்யப்படும் போது பெரிய விளைவுகளை உண்டாக்கும். பிறரின் உதவி இல்லாத நேரங்களிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், இறைவன் நம்மை ஆதரித்து நம் தேவைகளை நிறைவேற்றுவார். இதனால் நமது மனதில் பொறுமை, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு வளர்ந்து, வாழ்க்கை சவால்களை வெற்றி பெறும் வாய்ப்பாக மாற்றும்.
இந்த வசனம் நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை கற்றுக்கொடுக்கிறது:
1. நாமே பொறுப்புடன் வாழ வேண்டும்.
2. மற்றவர்களுக்கு அன்புடன் உதவ வேண்டும்.
இந்த இரண்டும் சமநிலையாக இருக்கும் போது, கிறிஸ்துவின் சபை ஆரோக்கியமாக வளர்கிறது.
அன்பான ஆண்டவரே! தாழ்மையுடனும் பொறுப்புடனும் வாழ உதவிடும். மற்றவர்களுக்கு சுமையாக இல்லாமல், ஆசீர்வாதமாக இருக்கச் செய்யும். தேவையான நேரங்களில் உதவி செய்யும் மனதையும், உதவி பெறும் போது நன்றியுடன் இருப்பதற்கும் கிருபை தாரும். என் வாழ்க்கை உம்முடைய அன்பை பிரதிபலிக்கட்டும். இயேசுவின் பெயரால், ஆமேன்.
